மரணத்தை ஜெயிக்க முடியும் என்று வேதம் திட்டவட்டமாக சொல்கிறது. இயேசு மிக தெளிவாக இக்கருத்து பற்றி திரும்ப சொல்கிறார்.
.
யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
.
இயேசு மெய்யாகவே மெய்யாகவே என்று உறுதிபடுத்திய சொன்ன இந்த வார்த்தையை கேட்ட ,
யோவான் 8:52 யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசு பிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்.
.
என்று ஏளனம் செய்தார்கள்.
.
ஆகினும் இயேசு மீண்டும் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.
.
யோவான் 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
.
இதை விசுவாசிப்பது கடினம் என்பதால்தான் இதை விசுவாசிக்கிறாயா? என்றும் கேட்கிறார்.
.
இன்றைய விசுவாசிகளும் இவ்வார்த்தைகளை விசுவாசிக்கததொடு இக்கருத்தை விளக்கி சொல்லும் என்னையும் ஏளனம் செய்வதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை என்றே எண்ணுகிறேன்.